திருமகள்
பொருளின்றி இவ்வையகம் இல்லை
பொருளீட்டாரை மதிப்பதில்லை உலகு
பொருளே அணிகலனாம் உடலுக்கு
பொருளே ஆக்கமாம் உயிர்க்கு
திருமகள் கண்பட்டால்
திருந்திவிடும் கழனியாவும்,
திருமகள் வந்துநின்றால்
திக்கெங்கும் செல்வச்சிறப்பு.
பொருளதனை ஈட்டிடவெ
பொருள் உணர்ந்த யாவருமே
பொருளாதாரம் பெருகவே
பொன் பொருளை ஈட்டிவிட்டார்.
பொன் பொருளும் சேர்ந்ததனால்
பொன்னான நாடாகும் - அதைப்
பொன்போலப் போற்றிடவே
பொன்னுலகம் பிறந்துவிடும்.
பொருளின்றி இவ்வையகம் இல்லை
பொருளீட்டாரை மதிப்பதில்லை உலகு
பொருளே அணிகலனாம் உடலுக்கு
பொருளே ஆக்கமாம் உயிர்க்கு
திருமகள் கண்பட்டால்
திருந்திவிடும் கழனியாவும்,
திருமகள் வந்துநின்றால்
திக்கெங்கும் செல்வச்சிறப்பு.
பொருளதனை ஈட்டிடவெ
பொருள் உணர்ந்த யாவருமே
பொருளாதாரம் பெருகவே
பொன் பொருளை ஈட்டிவிட்டார்.
பொன் பொருளும் சேர்ந்ததனால்
பொன்னான நாடாகும் - அதைப்
பொன்போலப் போற்றிடவே
பொன்னுலகம் பிறந்துவிடும்.
No comments:
Post a Comment