சித்திரைப் பெண்
சித்திரை பூத்ததும் பூத்தது வேம்பு.
கசந்ததோ?
சித்திரை, மக்களுக்கு முன்நின்று மருந்தாகவன்றோ
தந்திட்டாள்!
சித்திரை அவள்ததன்னை வசந்தமென வரவேற்க
சித்திரை பூமி எங்கும் பூத்து குலுங்கினாள்
சித்திரை பெண் தன் பூச்சிரிப்பு போதாது என
சித்திரை மாதம் முழுதும் கனிகளை தாங்கினாள்
தித்திக்கும் வாழையும் தேன்பலாவும்
அறுஞ்சுவை மாங்கனியும்
தீந்தமிழ் அன்னையாம் தமிழகத்திற்கும் தந்திட்தாள்
திகட்டாதோ அச்சுவை எனில்
திகட்டாமல் இனிப்பாக நினைவில் நிற்கும்
அடுத்த வசந்தம் வரை
தேவி ஜகா
No comments:
Post a Comment