Saturday, February 9, 2013

தாய்

               தாய்

தாய்மைக்கு ஓர் விளக்கம் என் தாய்
தாய்மைக்கு ஓர் உச்சம் என் தாய்
தாய்மை  என்றால் சுமப்பதும் ஊட்டுவதும்
                             மட்டும் அல்ல
தாய் நீ தான் என்னை வழி நடத்தி வாழவைத்தாய்
தாய் தந்த உருவமிது வளர்த்ததும் நீயே!
நீ சொல்லாமல் நான் கற்ற பாடங்கள் பல
நீ எனக்கு முன் உதாரணம் அடிப்படையில்
மண்ணில் செய்தால் அது மண் பாண்டம்
பொன்னில் செய்தால் அது பொன் பாண்டம்

கமலத்தம்மாவின் உதிரத்தாலும், மனத்தாலும்
              உருவாகியது இந்த தோற்றமும் குணநலமும்
இந்த மன உறுதியும் நேர்மையும் எத்தனை பேருக்குக் கிட்டும்?

தேவிஜகா

No comments:

Post a Comment