பரம்பரை
பரம்பரைக்கு அடிகோலும் மரபணு என்றுரைப்பர்
பரம்பரை வழித் தோன்றுவது தோற்றம்
பரம்பரையில் தொடரும் பல்வகைக் குணங்கள்
பரம்பரையில் தொடரும் பலவகை நோய்கள்
பரம்பரையாய் வருபவை அறிவுடமையாகும்
பரம்பரையைத் தொடரும் பாவ புண்ணியம் எனவே
பாரம்பரியம் சாகாமல் வாழும் சந்ததி உள்ளவரை
பாரம்பரியம் வாழ, நன்கு வாழ்ந்து முன்னோர்கள்
பாரம்பரியத்தை நிலைநிறுத்த வேண்டினர்
பாரம்பரியத்தைக் காத்திட வேண்டி
பாரதத்தில் பண்போடு வாழ்வோம் என்றும்.
தேவிஜகா
No comments:
Post a Comment