பேரானந்தம்
பிறர்க்கு ஈயும் மனத்திற்குப் பேரானந்தம்
பிஞ்சு உள்ளத்திற்கு விளையாட்டில் பேரானந்தம்
போரில் வென்ற வீரனுக்கு வெற்றியில் பேரானந்தம்
தன்னை வென்ற ஞானிக்கு என்றும் பேரானந்தம்
தரணியில் தியாகிக்குப் பிறர் உய்ய ஆனந்தம்.
இளமை
இளமையிது இளமையிது இனிய வசந்தமிது வாழ்வில்
இளமையிலே கற்றுவிடு செல்வம் பெற்றுவிடு
இளமைத்துடிப்போடு உழைத்து வாழ்வை வகுத்துவிடு
இளவதில் பெற்றவை அனுபவம் பல முதுமையிலும் உதவும்
புதுமணப் பெண்ணே
திருமணத்தை எண்ணி அங்கே
திருமகளாய்த் தினந்தோறும்
பல இன்பக் கோட்டைக்கட்டித்
திரும்பிய இடமெல்லாம் இன்பமயமாகக்
கற்பனை செய்த நீ
திருந்திய கழனியாய்ப் புகுந்த வீட்டை
நினைப்பதில் தவறென்ன?
நினைப்பதெல்லாம் நடந்திடுதா?
ஞானப்பெண்ணே?
நிலைத்திருக்க முடியுமா உன்னால்
கோட்டை வீட்டில் ?
நிற்கும் போதும் நடக்கும் போதும்
உன்னை எடைபோடும் மனிதரிடம் வந்துவிட்டாய்
நிலம் விட்டு நீர் விட்டுப் பெற்ற தாய் தந்தை
உடன்பிறப்பை செல்வச்செழிப்பை விட்டு ஏன்
உன் சுதந்திரத்தையும் விட்டுவந்ததை
உன் மனம் இன்றுதான் உணர்ந்திற்றா?
உரமான உள்ளம் வேண்டும் ஞானப்பெண்ணே
உன்னை உயர்திடப் போராடி
உயர்ந்திடு ஞனப்பெண்ணே
பிறர்க்கு ஈயும் மனத்திற்குப் பேரானந்தம்
பிஞ்சு உள்ளத்திற்கு விளையாட்டில் பேரானந்தம்
போரில் வென்ற வீரனுக்கு வெற்றியில் பேரானந்தம்
தன்னை வென்ற ஞானிக்கு என்றும் பேரானந்தம்
தரணியில் தியாகிக்குப் பிறர் உய்ய ஆனந்தம்.
இளமை
இளமையிது இளமையிது இனிய வசந்தமிது வாழ்வில்
இளமையிலே கற்றுவிடு செல்வம் பெற்றுவிடு
இளமைத்துடிப்போடு உழைத்து வாழ்வை வகுத்துவிடு
இளவதில் பெற்றவை அனுபவம் பல முதுமையிலும் உதவும்
புதுமணப் பெண்ணே
திருமணத்தை எண்ணி அங்கே
திருமகளாய்த் தினந்தோறும்
பல இன்பக் கோட்டைக்கட்டித்
திரும்பிய இடமெல்லாம் இன்பமயமாகக்
கற்பனை செய்த நீ
திருந்திய கழனியாய்ப் புகுந்த வீட்டை
நினைப்பதில் தவறென்ன?
நினைப்பதெல்லாம் நடந்திடுதா?
ஞானப்பெண்ணே?
நிலைத்திருக்க முடியுமா உன்னால்
கோட்டை வீட்டில் ?
நிற்கும் போதும் நடக்கும் போதும்
உன்னை எடைபோடும் மனிதரிடம் வந்துவிட்டாய்
நிலம் விட்டு நீர் விட்டுப் பெற்ற தாய் தந்தை
உடன்பிறப்பை செல்வச்செழிப்பை விட்டு ஏன்
உன் சுதந்திரத்தையும் விட்டுவந்ததை
உன் மனம் இன்றுதான் உணர்ந்திற்றா?
உரமான உள்ளம் வேண்டும் ஞானப்பெண்ணே
உன்னை உயர்திடப் போராடி
உயர்ந்திடு ஞனப்பெண்ணே
No comments:
Post a Comment